கிளிநொச்சியி;ல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களின் விஸ்தீரணத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அடுத்தே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது
அனைத்து படைப்பிரிவுகளையும் ஆயுதங்களையும் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தோற்கடித்தமையானது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சரணடையுங்கள் புனர்வாழ்வளிக்கப்படும் என்று கூறியதாலேதான் நாங்கள் சரணடைந்தோம்! எனவே எங்களுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்யுங்கள்! என்று நேற்று வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள விஷேட நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதியிடம் முன்னாள் போராளிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
தென்னிலங்கையில் இருந்து வியாபார நோக்கத்திற்காக யாழ் சென்றிருந்த மூன்று சிங்களவர்கள் இனந்தெரியாதோரால் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் இலங்கை தமிழர்களை அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர், ஜாலிய விக்கிரமசூரிய அண்மையில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரிலேயே நடாத்தப்பட்டுள்ளது
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அதிபர் மற்றும் அவரது தம்பிகள் தவிர, இந்தியத் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங் , காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரும் சர்வதேச அரங்கில் விசாரிக்கப்பட வேண்டும் என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி வலியுறுத்தினார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா கரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியின் வேண்டுகோளின் பிரகாரம், அவரின் குடும்பத்தவர்களைக் காப்பாற்றும் முயற் சியில் நான் ஈடுபட்டேன். தற்போது அரசாங்கத்தின் பாதுகாப்பிலுள்ள கே.பி. (குமரன் பத்மநாதன்) கனடாவில் ஆங்கில இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
எமது தாயகம் இனிமேல் வெளிநாடுகளின் குப்பைகளை கொட்டும் இடமாக இருக்காது. மாறாக “மேட் இன் ஸ்ரீலங்கா'' என்ற நாமத்தை உலகம் பூராவும் பறைசாற்றும் உற்பத்திகளை உருவாக்கும் பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றுவதே எமது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து சண் சீ கப்பல் மூலம் கனடாவுக்கு வந்துள்ள 490 பேருக்கும் அகதி அந்தஸ்தை வழங்கக்கூடாது என இலங்கை அரசாங்கம் கனடாவிடம் கோரியுள்ளது
விளையாட்டு வீரர்களுக்கான ஆடை களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று கிளிநொச்சியைச் சேர்ந்த 40 யுவதிகளைக் கண்டிக்கு அழைத்துச்செல்ல இருந்த முயற்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனால் தடுத்து நிறுத்தப்பட்டது.
14.08.2010 அன்று சிவந்தன் அவர்களின் கோரிக்கைகளுக்கு வலுசேர்க்கும் வகையில் சுவிஸ் சூரிச்சிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி மனிதநேய நடைப்பயணத்தை தமிழின உணர்வாளர்கள் மூவர் மேற்கொண்டுள்ளனர்.
கனடாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகளுக்கு சிறப்பான வாழ்வினை ஏற்படுத்த வேண்டியது கனடாவின் கடமை என கனேடிய சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.