பதுளையில் இ.தொ.காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தங்கியிருந்த விடுதி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்று விசாரணை நடத்துவதற்காக நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்படவேண்டும் என்ற ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூனின் யோசனைக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவதற்காக இனி ஒருபோதும் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுவிஸ் நாட்டில் மார்ச் மாதம் 28 ஆம் திகதி சுவிஸ் தமிழ் டயாஸ்பொறா (Swiss Tamil Diasppra) என்ற அமைப்பு நடாத்தப்போவதாக அறிவித்துள்ள தேர்தலுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் இடையே எவ்வித தொடர்புகளும் இல்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல் சம்பவங்கள் மேலும் இடம்பெறாமல் தடுப்பதற்கு, அவுஸ்திரேலியா - இந்தோனேசியா நாடுகளிடையே ஓர் புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சோமாலிய கடற் கொள்ளையர்களினால் கடத்தப்பட்டுள்ள சவுதி அரேபிய கப்பலில் கடமையாற்றிய இலங்கைப் பணியாளர்களை விடுதலை செய்வது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதாக பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் உறுதிளித்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் இம்முறையும் பாராளுமன்றத் தேர்தலிலே பெருவாரியான வாக்குகளால் எம்மை வெற்றி பெறச்செய்து தமிழ் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராகிய பிரபா கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன், இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான நிபுணர்கள் குழுவை நியமிப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்த போதிலும், அது தொடர்பில் இலங்கை அரசுடன் கலந்துரையாடுவதற்கு தமது உதவி செயலாளரை இலங்கைக்கு அனுப்பவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சின் நிரந்தர உதவிச் செயலாளர் சேர் பீட்டர் ரெக்கட்ஸ், இன்று இலங்கைக்கு விஜயம் மெற்கொள்கின்றார்
கரூர் அருகே ராயனூரில் உள்ள இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸாரின் அச்சுறுத்தல் காரணமாக தீக்குளித்துள்ளார்.
விடுதலை புலிகளின் சட்டப்பிரிவில் பணியாற்றிய பெண் ஒருவரும், அவரது இரு பிள்ளைகளும் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.