இலங்கையில் நடைபெறும் ஈழப் போராட்டத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறவர்களுக்கு தமிழர்கள் இடம் கொடுக்கக் கூடாது என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைக்காக போராடி இதுவரை 22 ஆயிரத்து 114 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1987 முதல் 31.10.2008 வரையான காலப்பகுதியில் இந்த மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர்.
தலைநகர் கொழும்பிலும் தென்பகுதிச் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 1,200 தமிழ் அரசியல் கைதிகள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்தி விடுதலை செய்வது குறித்து சட்டமா அதிபர் ரி.ஆர்.டி.சில்வாவை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
மரணத்துள் வாழும் தமிழீழ மக்களின் அவலங்களை நோர்வே அரசாங்கத்திற்கும் அனைத்துலக சமுதாயத்திற்கும் வெளிப்படுத்தும் போராட்டத்தின் ஓர் வடிவமாக தொடர்ச்சியாக 48 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நோர்வேயில் உள்ள பேர்கன் தமிழ் இளையோர் அமைப்பு இன்று (20.11.08), வியாழன் மாலை 6 மணிக்கு metodis church -ல் ஆரம்பித்துள்ளனர்.
பரந்தன் பூநகரிப் பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் 200 மீற்றர் நீளமான விமான ஓடு தளத்தை படையினர் கைப்பற்றியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிலாபம் மாரவில பகுதியில் இறால் பண்ணையொன்றில் கடமை புரிந்த 22 தமிழ் இளைஞர்களையும் குறித்த இறால் பண்ணையை நிர்வாகம் செய்த முகாமையாளரையும் மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றைத் தவிர்ந்த ஏனைய அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் தடை செய்ய வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிய ஆறு தென்னிலங்கை சிங்கள டாக்டர்கள் கடமையில் இருந்து விலகி மாவட்டத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் ஒன்றில் விசேட அதிரடிப்படையினர் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பூநகரியில் இருந்து தந்திரோபாயமாகவே விலகிச் சென்றனர் என்ற கருத்தை அரசாங்கம் மறுத்துள்ளது. அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, இதனை மறுத்துள்ளார்.
வவுனியா ஓமந்தை சோதனை சாவடிக்கு ஊடாக வன்னிக்கான பாதை போக்குவரத்து தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இணக்கம் ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.
வன்னி மக்களுக்கான இந்தியாவின் நிவாரணப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.