இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு அனுமதிக்கப்படாத வரைக்கும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பா.உ. தெரிவித்துள்ளார்.
நாட்டை மீட்டெடுத்து விட்டோம் என்ற திருப்தியில் நாம் சும்மா இருந்துவிடக்கூடாது. இன்றும் யால காட்டில் "ராம்' தலைமையில் 20 புலிகள் நடமாடி வருகின்றனர். அவர்களையும் விரைவில் முடித்து விடுவேன் என்று மொனராகல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சேனாரத்ன தெரிவித்தார்.
இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் யால தேசியப்பூங்கா ஆகிய இடங்களுக்கு தமது பிரஜைகளை செல்லவேண்டாம் என பிரித்தானியா கேட்டுள்ளது. பிரித்தானிய பொதுநலவாய அலுவலகம் விடுத்துள்ள பிந்திய பயண வழிகாட்டியிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வன்னிக் களமுனையில் இறுதியாக என்ன நடந்தது? விடுதலைப்புலிகளின் தலைவர் குறித்து உண்மை நிலை என்ன என்பவற்றை இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு செய்தி வெளியிட்டுள்ளது.
மதவாச்சி சோதனைச் சாவடியின் பாதுகாப்பு நடைமுறைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை காலமும் இயங்காமல் இருந்த காவல்துறை மற்றும் பொதுநிர்வாக ஆணைக் குழுக்களின் அதிகாரங்களை அமைச்சுக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
யுத்தம் முடிவடைந்த பின்னர், இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முதல்முறையாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டார் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.
மோதல் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றுவதுடன் அவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
கொழும்பிலிருந்து சென்னைக்கு செல்வதற்கு 12500 ரூபா அறவிடப்படும் அதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு செல்ல 22000 ரூபா அறவிடப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
நலன்புரி மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் எங்களுக்கு நல்ல அனுபவங்கள் இருக்கின்றன. அவை தொடர்பில் அரசாங்கத்தினால் உலகத்திற்கே கற்பித்து கொடுக்கமுடியும் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை வட மாகாணத்திற்கும் வட மத்திய மாகாணத்திற்கும் இடையில் உள்ள எல்லைக் கிராமங்களில் குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இலங்கைசென்ற வணங்காமண் கப்பலை சோதனை நடத்தி, ஆயுதங்கள் இல்லை என்று உறுதி செய்த பின்னரும் கப்பலை அனுமதிக்காமல் வெளியேற்றினர். இது சர்வதேச விதிகளுக்கு மாறானது என கப்பலின் கப்டன் முஸ்தபா தெரிவித்துள்ளார்.