பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியாக பொறுப்பேற்க மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா வரும் பட்சத்தில் போர்க்குற்றவாளி என அவர் கைது செய்யப்படுவார் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான பரிக் காடினர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுத் தூதரகங்களினால் மறுக்கப்பட்ட விசாக்கள் 2 வாரங்களில் மீளப் பெற்றுத் தரப்படும் என்று பொய் சொல்லி யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களை ஏமாற்றி 5 லட்சம் வரை பணம் கறக்கும் கும்பலினால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
ஐரோப்பாவைச் சாராத குடியேற்றவாசிகள் பிரிட்டனுக்குச் செல்வதற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது தமது கணவன் அல்லது மனைவியுடன் இணைந்துகொள்ள விண்ணப்பிக்க விரும்பினால் எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி முதல் ஆங்கில மொழிப் பரீட்சைக்குத் தோற்றுவது அவசியமாகுமென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், வேலணை குடும்பநல உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் இன்று முற்பகல் கைதடியில் உள்ள மயானத்தில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் உயிரிழந்தார். லண்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 06.20 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரசியல் அமைப்புத்திருத்தம் சம்பந்தமாக ஜனாதிபதிக்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கிடையில் நடத்தப்பட்டுவரும் பேச்சு வார்த்தைகளில் இருவரும் மூன்று விடயங்கள் தொடர்பில் இரகசியமான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.
ஈழத் தமிழர்களின் வாழ்வில் ஆழப்பதிந்த ரணங்களில் ஒன்றான கறுப்பு ஜூலை இனப்படுகொலைக்கு வித்திட்ட, 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மறைமுகமாக உதவினார் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த இராணுவ அதிகரியே தற்போதைய யாழ் பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க எனத் தெரியவந்துள்ளது.
வடமாகாணத்தைச் சிங்கள மாகாணமாக மாற்றி அங்கு இராணுவத்தினர் உட்பட அவர்களது குடும்பங்களுமாக சுமார் நான்கு இலட்சம் பேரை குடியேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரச காணிகள் மட்டுமின்றி தமிழர்களது காணிகளும் சுவீகரிக்கப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு நாம் அறிக்கை கொடுத்தும் எதுவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியப் பட விழாவுக்கு இந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகர், நடிகையும் போகக் கூடாது என திரையுலகினர் கூடி போட்ட தீர்மானத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒப்புக் கொண்டு யாரும் போகக் கூடாது என கேட்டுக் கொண்டிருந்தது.
சிறீலங்கா அரசு மீதான சுயாதீன போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள பயணம் 42 மைல்களை எட்டியுள்ளது.
தற்போதைக்கு நிறைவேற்று அதிகார பிரதமர் முறைமை அறிமுகப்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையிடம் கடற்படைப் பயிற்சியை கோரியுள்ளதாக லக்பிம பத்திரிகை பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.