சிறீலங்கா அரசு மீதான சுயாதீன போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள பயணம் 42 மைல்களை எட்டியுள்ளது.
தற்போதைக்கு நிறைவேற்று அதிகார பிரதமர் முறைமை அறிமுகப்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையிடம் கடற்படைப் பயிற்சியை கோரியுள்ளதாக லக்பிம பத்திரிகை பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
போருக்குப் பின்னர் முன்னாள் போராளிகளெனக் கூறி கைதுசெய்யப்பட்ட பலர் எங்குள்ளனர் என்று தெரியாத நிலையில் அவர்களது குடும்பங்கள் சிறைகளிற்கும் தடுப்பு முகாம்களிற்கும் அலைந்து திரிகின்றனர்;.
யாழ்.மாவட்டத்தில் உள்ளசகல பொதுச்சுகாதார வைத்திய பிரிவுகளிலும் சுமார் 40 பேருக்கு கட்டாய குடும்பக்கட்டுப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் மிகவும் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆண்டுகள் பல கடந்துள்ள நிலையில் எங்களைப்போல இலங்கையில் இருக்கின்ற சிறைச்சாலைகள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான உறவுகள் கண்களில் நீர்வழிய கானலாகிப்போகும் தங்கள் விடுதலைக்குரிய நாட்களை எண்ணி கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்...
கொழும்பு விளக்கமறியல்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் மீது சிறைக்காவலர்களும் சிங்கள கைதிகளும் தாக்குதலை நடத்தி வருவதாக சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகள் தமிழ்வின் இணைத்தளத்திற்கு தெரிவித்துள்ளனர்.
கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் இரத்த நாட்களை நினைவுகூர்ந்து லண்டனில் நேற்றைய தினம் இரவு நேர கவனயீர்ப்பு பேரணி ஒன்று பிரித்தானியா வாழ் தமிழ் மக்களால் நடாத்தப்பட்டது.
வெளிநாடுகளில் தளம் அமைத்து செயற்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலயமைப்பினை முறியடிப்பதற்கும் புலிகளின் முக்கியஸ்தர்களை கைது செய்வதற்கும் இன்டர்போல் பொலிஸாருடன் இணைந்து இலங்கை புலனாய்வு பிரிவினர் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழர்களின் நெஞ்சில் நீங்காத வடுவாக இருக்கும் கறுப்பு யூலை 1983 நினைவு சுமந்து காணொளி விபரணம்
கறுப்பு யூலை என்னும் இந்தக் கோரத்தினை மீள் நினைக்கவும், நம் தமிழினத்தின் அவலம் இன்னும் முடியவில்லை என உணர்த்தவும் நாம் தொடர்ந்து போராடுவோம். தமிழீழ தனியரசே தீர்வென சர்வதேசத்துக்கு உரத்துக் கூறிடுவோம். இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகள், தலைமைச்செயலகம், விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூநகரி. வுலைப்பாடு பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் ஜஸ் உற்பத்தி நிலையத்தினால் தமது வாழ்வுரிமை பறிக்கப்படும் அபாயம்? தோன்றியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.