Home
  Tamil Mp3 Songs
  Devotional Songs
  Wallpapers
  Love's
  Tamil Fonts
  Downloads
  Tamil Movies
  Mazhalai Kalvi
  Collection Song
  Tamil Jokes
  Video Songs
  Old Movies
  Live Movies
  Dance Hits
  Eelam Mp3 Song
  Satellite TV+ Radio
  Tamil Remix Song
  Special Albums
  Tamil Cinema News
  Hindi Mp3 Song's
 
 
Enter to Topsites and Vote for this Site!!!
Enter to kathalworld.com- Top 100 Sites and Vote for this Site!!!
Enter to Kathala.com - The Top 100 Sites and Vote for this Site!!!
 
www.eelammp3.com
 


"தங்கம் கண்டுபிடிக்க சுரங்கம் தோண்டிய
நமது வீரர்களை எல்லாம்
மன்னர் சிறையில் அடைத்துவிட்டாராமே?

ஆமாம் அவர்கள் தோண்டிய சுரங்கம்
அரண்மனையின்
தங்க கஜானாவில் போய் முடிந்திருக்கிறது;



"டாக்டர்;ஒரு சின்ன சந்தேகம்
கேட்டா தப்பா நினைக்கக் கூடாது;

நோயாளி;கேளுங்கள் டாக்டர் ஐயா

டாக்டர்; ஆப்ரேசனுக்கு அப்பறம்
நான் பீசை யார்கிட்ட போய் வங்கறது?





"டாக்டர்;ஐயா எனக்கு வயிறு எரியுது ...

நான் பீஸே சொல்லலை அதுக்குள்ள எப்படி?
 





''நேற்று இரவு நான் மாறுவேஷத்தில்நகர்வலம் வந்தது மக்களுக்கு எப்படித் தெரிந்தது!"

"தங்கள் காதில் வைத்திருக்கும் துண்டு பீடியை வைத்துக் கண்டுபிடித்துவிட்டார்கள் மன்னா!"






"பேண்ட் கிழிஞ்சிருக்கு கவனிகாமே
பேட்ஸ்மேன்ஆடிக்கிட்டிருக்காரே


தெரிஞ்சுதான் ஆடிக்கிட்டுருக்கார்
ஜட்டி விளம்பரத்துக்கு
பணம் வாங்கியிருக்காரு!






"நம்ம தலைவருக்குப் பொன்னாடை
போர்த்திக் கொள்வதில் அலாதி பிரியம்...

அதான் அடிகடி சலூனுக்குப் போறாரா...!?,,




"ஏன் சிஸ்டர் திடிர்னு எனக்கு ஆப்ரேஷன்
வேண்டாம்னு டாக்டர் சொல்லிட்டார்?

"டாக்டருக்கு திடிர்னு
வேற இடத்தில் இருந்து பணம் வந்துட்டதாம்!





''என்னப்பா காபியில் சராய வாடை அடிக்குது?'

''காபி மாஸ்டர் வரலை சரக்கு மாஸ்டர் தான் காபி போட்டார் அது தான்.!''
 


"நம்ம இன்ஸ்பெக்டரோட பேச்சைக் கேட்டு
தொப்பையை குறைச்சது தப்பாப் போச்சு...!''

''என்னாச்சு?''

மப்டியில இருக்கறப்போ
போலீஸ்கரன்னு சொன்னா
எவனும் நம்ப மாட்டேங்கறான்!''





"சாட்சி சொல்லும் போது,
நீ ஏன் கூண்டை விட்டு வெளியே வந்து சொல்ற?''

''நீங்கதானே எஜமான் இந்தக் கூண்டுல நின்னு
பொய் சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்க.''!






"டிராஃக் போலீஸ்பக்கத்துல நின்னுகிட்டு
எதுக்கு செல்போன்ல பேசறீங்க?

அப்போதானே சிக்னல் கிடைக்கும்"!





"என்னய்யா பழைய ஜோக்கா எழுதிட்டு வந்திருக்கே...

ரீ மிக்ஸ் ஜோக்ஸ் சார்!"




''டேய் தினகரா உன் காதலி பாக்கியாவுக்கு குங்குமம்
கொடுத்தியே அவள்பதிலுக்கு இதயம் கொடுத்தாளா?

அவள் இதயம் கொடுப்பதை எவனோ பார்த்துட்டு
அவள் அண்ணானுக்குப் போய் சாவி கொடுத்துட்டான்டா!"
 





''ஊசிபோட்ட பிறகு எதுக்கு டாக்டர்
ஸ்கேன் பண்ணனும்னு சொல்றீங்க?

இல்ல' உள்ள போன ஊசி இப்ப எங்க இருக்குன்னு
பாக்க ஆசையா இருக்கு...




"'எங்க தாத்தா எப்போதும் ஏசிக்கிட்டே இருப்பார்!''''

அடடா..ஏன்?

''புழுக்கம் தாங்கட்டி ஏ.சி.கிட்டேதானே இருக்கணும்.?''





"என் தாத்தாவுக்க 100 வயசு ஆகிறது ஆனா
இதுவரைக்கும் டாக்டர்கிட்டே போனதே கிடையாது...

நீங்க 100 வயசுன்னு சொல்லும் போதே நினைச்சேன்!




"டாக்டர் உங்களை பார்க்கனும் நீங்க எப்ப FREE?

நான் FREEயே கிடையாது எப்போதும் காசு தான்...!"





"நீங்க தான் டிஸ்சார்ஜ் ஆயாச்சே, இன்னும்ஏன் வீட்டுக்குப் போகாம இங்கேயே இருக்கீங்க

"பஸ் சார்ஜ் இல்ல டாக்டர் ''!






''எதுக்கு ரயில்வே ஸ்டேஷன்ல எல்லோரும்
பாட்டிலோட க்யூவில் நிற்கறாங்க?''

"சரக்கு ' ரயில் வருதாம் ''








"டெம்பரேச்சர் தாறுமாறா இருக்கே....!''

நேத்து வெச்ச தெர்மாமீட்டர் டாக்டர்
நர்ஸ் எடுக்க மறந்துட்டாங்க.....!''





''மன்னா! உங்கள் வாளுக்கு வேலை வந்துவிட்டது.''

"என்ன போர் அறிவிப்பா?''

''ம்ஹும்.... சாணை பிடிப்பவர் வந்துள்ளார்.!"





"போரில் இருந்து ஏன் மன்னா
இவ்வளவு சீக்கிரம் ஓடி வந்துவிட்டீர்கள்

"நானும் எவ்வளவு நேரம்தான்
வலிக்காத மாதிரியே நடிக்கிறது

ஹி... ஹி... ஹி... !''





"ஏண்டா, நீ ஜோக் அடிச்சுட்டு நீயே சிரிச்சுக்கறே?''

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போய்விடும்.!
ஹ...ஹ...ஹ...!''


''உனக்கு எவ்ளோ திமிர் இருந்தா,
'ஒரு பொற்காசு பிச்சை போடுங்க!'ன்னு கேட்பே?''

''உங்க வீட்டு வாசல்லே, 'ராஜபவனம்'ன்னு இருக்கிற
போர்டை பார்த்துதான் கேட்டேன் ஐயா!''





"அந்த சலூனுல ஏன் அவ்வளவு கூட்டம்?''

''ஹெல்மெட் மாதிரி அச்சு அடித்தது போல்
முடிவெட்டி விடுறாங்களாம்!"







"தலைவர் உன் கன்னத்தில் பளார்ன்னு ஒரு
அறைவிட்டாரே நீ அப்படி என்னடா செஞ்சே?''

''அவர் ஜெயிக்கக் காரணமாயிருந்த கள்ள ஓட்டுக்களைச் சேர்த்து
அவருக்கு மாலையாப் போட்டேன்,அதான்...!




"எதுக்கு போலீஸ்காரர்
தபால்காரர் கூட சண்டை போடறாரு?''

"தந்தி வந்துருக்குனு சொல்ரதுக்கு பதில்,
தொந்தி வந்துருக்குனு சொல்லிட்டாராம்!"





"தலைவரே! நீங்க இப்ப சொன்னது
நூத்துக்கு நூறு உண்மை...!''

''சரியான ஜால்ராய்யா நீ!
இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை...
கொட்டாவி தான் விட்டேன்...!''